இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை அந்நாட்டு பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்றவுள்ளார்.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு லண்டனில் இன்று இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
ஊழல் ஒழிப்பில் ஒத்துழைப்புடன் செயற்படவும் பொதுவான பிரச்சனைகளின் போது சகோதரத்துவத்துடன் நேச நாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கவும் இந்த மாநாட்டின் போது இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM