மின்னல் தாக்கி இளைஞன் பலி 

Published By: R. Kalaichelvan

14 Aug, 2019 | 01:06 PM
image

(செ.தேன்மொழி)

இரத்தினபுரி - கிரியெல்ல பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியெல்ல - தும்பர பகுதியில் நேற்று பிற்பகலே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தும்பர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது வீட்டிலுள்ள இரும்பு கட்டிலுக்கு கீழ் உறங்கி கொண்டிருந்துள்ள போதே இவ்வாறு மின்னலால் தாக்கப்பட்டுள்ளார். 

இதன்போது கவலைக்கிடமான நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை நேற்று முன்தினம் இரத்தினபுரி - கிரியெல்ல பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் கடும் காற்றும் மற்றும் மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்பட்டன. இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த இளைஞர்  மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53