அ.தி.மு.க., தி.மு.க.விடமிருந்து விடுதலை வாங்கித்தரவே தமிழகம் வந்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களை எனது அரசு காப்பாற்றியது. மரணதண்டனை இரத்து மட்டும்போதாது விடுதலை செய்ய இலங்கையை வலியுறுத்தினேன். இந்தியாவின் நெருக்குதலால்தான் இலங்கை அரசு 5 மீனவர்களையும் விடுதலை செய்தது தூக்குத்தண்டனைக்குள்ளான தமிழக மீனவர்களின். அப்பா, அம்மா ஸ்தானத்தில் இருந்து அவர்களைமீட்டேன் மத்திய அரசு தமிழக மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்துள்ளது நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இலங்கையால் விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களை பார்க்கும்போது உள்ளம் நெகிழ்கிறது. மேலும், தேசம் விடுதலை பெற்ற பிறகு வேதாரண்யம் வந்த முதல் பிரதமர் நான்தான் தி.மு.க, -அ.தி.மு.க. கட்சிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை வாங்கித்தர வந்துள்ளேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலுள்ள அரசுகளின் ஒரே மந்திரம் வளர்ச்சி என்பது மட்டுமே.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சொல்வீர்களா?கல்வி கூடம், அலுவலகம், வீடு எதிலாவது 24 மணிநேரமாவது மின்சாரம் வருகிறதா. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வந்து கொண்டுள்ளது. சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் ஆகிய பிறகும் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. சுத்தமான குடிநீர் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்கள் வளர்ச்சிக்காகத்தான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். மீனவர்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறிவேன். எனது வாரணாசி தொகுதியில் மீனவர்களுக்கு -படகு திட்டம் கொண்டுவந்தேன் சூரிய ஒளி மூலம் அந்த படகுகள் இயங்குவதால் நாளுக்கு 500 ரூபா மிச்சமாகிறது.
தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். தலிபான்களால் கடத்தப்பட்ட யாருமே இதுவரை உயிரோடு வந்தது கிடையாது. 9 மாதங்களாக தொடர்ந்து முயற்சி செய்து பத்திரமாக மீட்டோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசில் தினமும் ஒரு ஊழல் நடந்தது. 2ஜி, 3ஜி என அனைத்திலும் முந்தைய அரசு ஊழல் செய்தது. 2ஜியில் கொள்ளையடித்தவர்கள் தமிழகத்தில் இன்னும் வலம் வருகிறார்கள். ஊழல் இருக்கும்வரை தமிழகம் வளராது. ஊழல் இல்லாத அரசாங்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமானால் தாமரைக்கு வாக்களியுங்கள். தமிழகம் தலை நிமிர வேண்டுமானால் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM