ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் ரணில் தொடர்ந்தும் விடாப்­பிடி

Published By: R. Kalaichelvan

14 Aug, 2019 | 10:24 AM
image

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யாரை நிய­மிப்­பது என்ற விட­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள்  தொடர்ந்தும்  இழு­பறி நிலைமை  காணப்­பட்டு வரு­கின்­றது.

பிரதித் தலைவர்  சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக  நிய­மிக்­க­வேண்டும் என்று கட்­சியின்  சிரேஷ்ட தலை­வர்கள்  மற்றும்  கனிஷ்ட தலை­வர்கள்   பலரும்  கோரி வரு­கின்ற நிலையில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   இந்த விட­யத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி  வேட்பாளர் தொடர்பில் விடாப்­பி­டி­யாக  இருந்து வரு­வ­தா­கவே தெரி­கின்­றது. 

 ஜனா­தி­பதி தேர்­தலில்  தானே  வேட்­பா­ள­ராக  போட்­டி­யி­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தீவி­ர­மாக உள்ளார்.  அவ­ருக்கு ஆத­ர­வா­கவும்   பல சிரேஷ்ட தலை­வர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். 

பாரா­ளு­மன்ற  குழுக்­கூட்­டத்­தையும் கட்­சியின்  செயற்­கு­ழுக்­கூட்­டத்­தையும் கூட்டி   வாக்­கெ­டுப்­பினை நடத்தி   பெரும்­பான்­மையை பெறு­ப­வ­ருக்கு வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று  சஜித் அணி­யினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். 

இந்த விடயம் தொடர்பில்   பிர­த­ம­ருக்கு கடிதம் அனுப்­பு­வ­தற்­காக   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையெ­ழுத்­து­களும் பெறப்­பட்டு வரு­கின்­றன.  ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரை  தெரி­வு­செய்­த­பின்பே   தேர்­த­லுக்­கான   பொதுக்­கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை மேற்ெள்­ள­வேண்டும் என்று சஜித் அணி­யினர் கோரி வரு­கி்­ன­றனர்.  ஆனால்  பொதுக்­கூட்­ட­ணியை அமைத்­து­விட்டு  வேட்­பா­ளரை  தெரிவு செய்­ய­வேண்டும் என்று நிலைப்­பாட்­டி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும்   இருந்து வரு­கின்றார். 

இந்த நிலையில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அணியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று  கூட்­டுக்­கட்­சி­களின் தலைவர் ஒரு­வ­ரிடம்  கருத்து தெரி­வித்­த­போது   ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு கீழ்  பிர­த­ம­ராக   ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால் அவர்  அர­சி­யலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். அத்­துடன்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­லி­ருந்து பலரும்  வெளி­யேறும் நிலைமை ஏற்­படும் என்று  கருத்து தெரி­வித்­துள்ளார். 

இவ்­வா­றான நிலையில் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையில்  ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம்   இடம்பெற்றது.  இந்தக் கூட்டத்தின் போது பொது எதிரணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும்   விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30