ஹட்டன் நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் இன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மழை காரணமாக அப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நோர்வூட் பிரதே சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை தலைவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM