(எம்.மனோசித்ரா)
அமெரிக்காவுடன் இரகசிய கூட்டு வைத்திருப்பது ஐக்கிய தேசிய கட்சியா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவா என்று கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய கூட்டு வைத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார். இவ்வாறு பல சந்திப்புக்களை நடத்தி அவர்கள் தான் இரகசிய கூட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களிலேயே ஈடுபட்டுள்ளோம். யார் எவ்வாறு செயற்பட்டாலும் மக்களே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் இவ்வாறான ஏமாற்று உத்திகளை கையான்டு மக்களை ஏமாற்ற முடியாது.
கட்சியில் வேட்பாளரை பெயரிடுவதற்கென முறையொன்றுள்ளது. நாம் அம் முறையினை பின்பற்றி வேட்பாளரை தெரிவு செய்வோம். அதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் அவருடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தெனியாயவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிழவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM