(நா.தனுஜா)
அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டமானது சூழலுக்கு நேயமான முறையில் பின்பற்றப்பட வேண்டிய தராதரங்களை அனுசரித்தே முன்னெடுக்கப்படுகின்றது.
இங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கான கட்டமைப்பு விஞ்ஞான முறைமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் மக்களுக்கு பாதிப்புக்களோ அல்லது சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மாசடைதல் போன்ற சுற்றாடல்சார் பிரச்சினைகளோ ஏற்படாது என்ற உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகின்றோம் என்று பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் விவகாரம் தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் கூறிதாவது:
அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டமானது சூழலுக்கு நேயமான முறையில் பின்பற்றப்பட வேண்டிய தராதரங்களை அனுசரித்தே முன்னெடுக்கப்படுகின்றது.
அத்தோடு அங்கு கொட்டப்படுகின்ற கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பையும் தயார் செய்திருக்கின்றோம்.
இத்திட்டத்தின் காரணமாக இன்றளவில் கொழும்பில் குப்பைப் பிரச்சினை முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்;, இது நிலைபேறானதொரு தீர்வும் ஆகும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM