(ஆர்.யசி)
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த பாராளுமன்ற அனுமதியை அடுத்தவாரம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையானது இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.
இந்நிலையில் சாட்சியங்களில் இறுதிக்கட்ட விசாரணையாக ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதுடன் அறிக்கையை முழுமைப்படுத்த வேண்டியுள்ள நிலையில் விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்க, அதாவது அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரையில் நீட்டிக்க தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி பாராளுமன்ற அனுமதியை கேட்கவுள்ளனர்.
அதேபோல் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை சாட்சியம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM