அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் பெண்ணொருவரை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நபர் வேறு பலரையும் கத்தியால் குத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
மற்றொரு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரிய கத்தியுடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் வைத்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக பொதுமக்கள் கதிரைகள் உட்பட பல பொருட்களை பயன்படுத்துவதையும் பின்னர் காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்வததையும் காண்பித்துள்ளன.
குறிப்பிட்ட பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நான் வைன்யார்ட் பூங்கா பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த வேளை நீண்ட கத்தியுடன் நபர் ஒடினார் அவரை வேறு சிலர் துரத்திக்கொண்டு செல்வதை பார்த்தேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரை துரத்தியவர்களின் கைகளில் தடிகள் பொல்லுகள்காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பெண்ணொருவரை கத்தியால் குத்திவிட்டு வேறு பலரை கத்தியால் குத்த முயன்றார் பல குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM