(ப.பன்னீர்செல்வம்)
மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்து இன்று வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும் இந்த மோசடிக் காரர்களை பாதுகாக்க அமைச்சரவைக்குள்ளும் சில புள்ளுருவிகள் இருப்பதாகவும் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான பல நடைமுறைகள் உள்ளன. எனவே விசாரணைகள் முழுமை பெற காலதாமதமாகும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தனது மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.
விரைவில் விசாரணைகள் முடிவடையும். மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள்.
யார் என்ன முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM