(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க அவர்களுக்கு அழைப்புக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாக நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலுள்ள பலரும் அதன் முன்நிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தனர்.
தாக்குதல்கள் குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவுக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவை நெறிப்படுத்திய உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்கொட மற்றும் அதன் உறுப்பினர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகிய மூவருக்குமே இவ்வாறு விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அழைப்பு விடுக்கப்படலாம் எனக்கூறப்பட்டு வந்த நிலையில், அத்தகைய திட்டங்கள் எவையும் தெரிவுக்குழுவிடம் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் 'அதுகுறித்து முன்னரே அறிந்திருந்தார்களா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ போன்றோரிடம் விசாரணைகள் முன்னெடுக்
கப்படுமா என்று அவரிடம் வினவியபோது, அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களின் பட்டியலில் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM