(ரொபட் அன்டனி)
கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம் என்று சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நாங்கள் கோத்தபாய ராஜபக் ஷவுடன் தொடர்ந் தும் பேச்சு நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே அவர் இதனை கூறினார்.
அண்மைக் காலமாக கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகா மல் சமல் ராஜபக் ஷ வேட்பாளராகினால் சிறந்ததாக இருக்கும் என்று டிலான் பெரேரா கூறிவந்தார். இந்நிலையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றீர்கள் என்று வினவியபோது, டிலான் பெரேரா இவ்வாறு கூறினார்.
சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது கூட்டு எதிரணியில் செயற்படுபவருமான டிலான் பெரேரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்;
கோத்தபாய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதலாவது கூட்டத்தில் கோத்தபாய ராஜபக் ஷ ஆற்றிய உரை எம்மை ஆச்சரியப்படுத்தியது. இதுவரை காலமும் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர் வேட்பாளர்களை விமர்சிப்பதும் எதிர்க்கட்சிக்கு சேறுபூசுவதையுமே வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆற்றிய உரையில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார்.
யாருக்கும் சேறுபூசும் செயற்பாட்டில் ஈடுபடவில்லை. நாட்டுக்கு என்ன தேவையாக உள்ளதோ அதனை தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் கோத்தபாய ராஜபக் ஷ உறுதியளித்தார். அந்ததவகையில் சம்மேளனம் நடைபெற்ற விதம் கோத்தபாய ராஜபக் ஷ ஆற்றிய உரை ஆகியவற்றை பார்க்கும்போதும் அவர் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவார் என்று நம்பலாம்.
அதாவது கேக்குக்கு ஐசிங் பூசலாம் என்று தோன்றுகின்றது. எனவே இப்போது எங்களுக்கு வேறு தெரிவு இல்லை. கோத்தபாய ராஜபக் ஷவின் வெற்றிக்காக உழைப்போம். அவர் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் aநாங்கள் கோத்தபாய ராஜபக் ஷவுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்துவோம். அதற்கேற்ற வகையில் நாங்கள் தீர்வுக்காக செயற்படுவோம்.
தற்போது நான்கரை வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. தீர்வை வழங்கவில்லை. ஆனால் அந்தத் தீர்வை வழங்கும் சக்தி எம்மிடம் இருக்கின்றது.
எனவே கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பார் என்பதில் பிரச்சினை இல்லை. எமக்கு இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM