அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள எர்ரீ நகரை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியோடு தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய அளவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை நடத்தி வந்துள்ளார்.
3 மாடிகளை கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் இந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் இயங்கி வந்ததுள்ளது. இரவு பணிக்கு செல்லும் பெற்றோர் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு தங்களின் குழந்தைகளை இங்கு விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 சிறுவர்கள் இருந்துள்ளனர். வீட்டின் உரிமையாளரான அந்த பெண், சிறுவர்கள் அனைவரையும் தூங்கவைத்து விட்டு, தனது 8 மாத குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் பராமரிப்பு மையம் இயங்கி வந்த வீட்டில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து தீ வீடு முழுவதும் பரவியது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிறுவர்கள் வீட்டில் தீப்பிடித்து எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து பயத்தில் அலறி துடித்தனர்.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தனது குழந்தை மற்றும் சிறுவர்களை தீயில் இருந்து காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் வீடு முழுவதையும் தீ சூழ்ந்துகொண்டதால் அவர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
எனினும் சிறுவர்கள் 4 பேர் 2-வது தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி வீட்டு உரிமையாளரின் 8 மாத குழந்தை மற்றும் பராமரிப்பு மையத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்களும் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
வீட்டின் உரிமையாளர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதேபோல் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய 4 சிறுவர்களும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM