கோத்தபாயவின் தெரிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் ஜனாதிபதி

Published By: Vishnu

12 Aug, 2019 | 08:19 PM
image

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளித்தமைக்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது. 2015 க்கு முன்னர் ஊழல் நிறைந்த அரசாங்கமே இருந்தது. அந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தினால் நன்மைகள் கிடைக்கவில்லை. 

இதனால் அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் வெவ்வேறு துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தனர். யுத்தத்தை அவர்கள் நிறைவு செய்தார்கள். ஆனால் அவர்கள் தனியாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வரவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் பகுதியளவில் நிறைவடையச் செய்திருந்ததையே அவர்கள் முழுமையாக நிறைவடையச் செய்தார்கள். எனினும் அதுவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 

எனினும் எதிராகச் செயற்பட்ட இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அது மாத்திரமின்றி இராணுவத்தினர், பாதுகாப்பு செயலக அதிகாரிகள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஊடகவியலாளர்கள் பலர் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55