அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.
இந்த பந்தின் விசேட அம்சங்கள் :
* கிரிக்கெட் பந்துகளில் மிகவும் சிறிய அளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும்.
* இந்தப் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து வெளியேறும்போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் துடுப்பாட்ட வீரரை நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.
* சுழற்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பந்து எந்தப் பக்கம் சுழலும், எந்தப் பக்கம் செல்லும் என்பதை பந்து காற்றில் சுழன்று செல்லும்போதே கண்டுபிடிக்க இயலும்.
* டிஆர்எஸ் முறை இருந்தாலுமே அதிலிருந்து கிடைக்கும் ஆட்டமிழப்பு முடிவுகள் மிகத்துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் பந்து வந்துவிட்டால், உண்மையில் பந்து ஸ்டெம்பில் பட்டதா, அல்லது உரசிச் சென்றதா, துடுப்பாட்ட வீரரின் கால்காப்பில் பட்டு துடுப்பாட்ட மட்டையில் பட்டதா அல்லது நேரடியாக துடுப்பாட்ட மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டதா என்பதை மிகத்துல்லியமாக அறிய முடியும்.
* மேலும் ஒருவீரர் பிடியெடுத்ததில் சர்ச்சை எழுந்தால்கூட பந்து எந்த நேரத்தில் பிடிக்கப்பட்டது, தரையில் பட்டு பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என்பதையும் அறியலாம். இதன் மூலம் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்புகளுக்கு தீர்வு காண முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM