மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தோட்ட தொழிற்சாலைக்கு சொந்தமான லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தானது இன்று 12ஆம் திகதியன்று காலை 10 மணியளவில் பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்மோர் தோட்டத்திலிருந்து சுகவீனமுற்ற நபரை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் குறித்த வாகனத்தை செலுத்திய 54 வயதுடைய சாரதி மது அருந்தி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM