ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி அந்நாட்டின் தலைநகர் மொஸ்கோவில் பெருந்தொகையானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புட்டின் அதனை ஒரு பொருட்டாகக் கருதாது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியமான கிறிமியா விலுள்ள செவஸ்டோபோல் பிரதேசத் துக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற நைட் வூல்வ்ஸ் மோட்டார்சைக்கிள் குழுவினரின் வருடாந்த சவாரி நிகழ்வில் பங்கேற்றார். இதன்போது புட்டின் தலைக்கவசம் அணியாது மோட்டார்சைக்கிளைச் செலுத்தியமை பலதரப்பட்ட விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் புட்டி னின் கிறிமியா பிராந்தியத்துக்கான இந்த விஜயம் உக்ரேனின் இறைமையை மீறும் செயல் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவானது 2014 ஆம் ஆண்டு கிறிமியா பிராந்தியத்தை தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டிருந்தது. புட்டினுக்கு நெருக்கமான வலது சாரி தேசியவாத நைட் வூல்வ்ஸ் மோட்டார்சைக்கிள் குழுவினர் கிறி மியா ரஷ்யாவுடன் இணைத்துக்கொள் ளப்பட்டதற்கு ஆதரவளித்து வருபவர் களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM