வடகிழக்கை இணைத்து விரைவில் தென்னை முக்கோண வலயம் ; நவீன்

Published By: Digital Desk 4

12 Aug, 2019 | 12:42 PM
image

வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தென்னை செய்கையாளர்களிற்கான மானிய உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் தெங்கு பயிர்செய்கையினை அதிகரிப்பதற்காக திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றோம். வவுனியா மண் தென்னை செய்கைக்கு ஏற்றதாகவிருக்கிறது. எனவே நாம் எமது மாவட்ட காரியாலயம் ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராவிருக்கிறோம். அத்துடன் புத்தளம், குருநாகல் போல வடக்கு, கிழக்கை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நாம் முயற்சி செய்து வருகின்றோம். 

இன்று விவசாயிகளது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான அல்லது உயரிய விலை கிடைக்காமல் இருக்கிறது.தென்னை செய்கையிலும் நிலமை இதுவே. விவசாயியையும், சந்தையையும் எம்மால் இணைக்கமுடியாமல் இருக்கின்றமை துரதிஸ்டவசமே. அதனால் கூடுதலான சந்தர்பங்களில் இடைதரகர்களால் அதிகமான இலாபம் ஈட்டபடுகின்றது. எனவே நாம் இவ்விடத்தில் மாற்றம் செய்து நேரடியாகவே விவசாயிகளிற்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன்படி வடக்கு கிழக்கு முழுவதும் எமது அலுவலகங்களில் தமிழ் உத்தியோகத்தர்களை நியமித்து நேரடியாகவே விவசாயிகளுடன் கலந்துரையாடி சந்தை வாய்ப்புகள் தொடர்பாக தெளிவுறுத்த உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16