முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கையொப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்தடுத்த அரசாங்கங்கள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினைச் சீர்திருத்தத் தவறியமையானது மிகவும் நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர் கள் மீதும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் முறையினை முன் னோக்கி எடுத்துச்செல்வதன் மூலம், இலங்கை அரசினால் இறுதியாக இந்நாட்டு முஸ்லிம் பிரஜைகளுக்கான அதிக பாது
காப்பு மற்றும் சமத்துவத்தினை உறுதிப்ப டுத்த முடியும்.
தற்போது காணப்படுகின்ற முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள், குறிப்பாக திருமணம் முடிக்கக்கூடிய வயது, திருமணம் மற்றும் விவாகரத்தின் பரஸ்பர ஒப்புதலிலுள்ள பற்றாக்குறை மற்றும் தற்போது இருக்கின்ற காதி நீதிமன்ற அமைப்பில் காணப்படுகின்ற தீவிர வரம்புகள் போன்றன காணப்படுகின்றன. இப்பிரச்சினைகளை அணுக தவறுகின்றமையானது பெண்களை பாதிக்கப்படக்கூடிய இடத்தில் வைப்பதுடன் இலங்கை யின் அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்ட சமத்துவ உரிமையினைப்பலவீனப்படுத்துகின்றது.
குறைந்தது முப்பது வருடங்களாகவா வது, முஸ்லிம் பெண் அமைப்புகள் மற்றும் கல்வியியலாளர்கள் பகுதி மற்றும் முழுமையான சீர்திருத்தத்திற்காக வாதிட் டுள்ளனர். அடுத்தடுத்த அரசாங்கங்கள்
குறைந்தது 5 குழுக்களையாவது நியமித்தும், அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் தோல் வியுற்றுள்ளது.
இறுதியாக 2009 இல் நியமிக்கப்பட்ட நீதிபதி சலீம் மஹ்ரூப் தலைமையிலான குழுவானது தமது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை 2018ஆம் ஆண்டில் சமர்ப்பிக்க முன்னர் 9 வருடங்களாக அறிவுரை கோருதலில் ஈடுபட்டது. ஜூலை 2019, வர
வேற்பு மிக்க நகர்வாக, முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர்கள் சீர்திருத்தத்திற்கான 14 பரிந்துரைகளினை ஏற்றுக்கொண்டபோதும்மீண்டும் சீர்திருத்தத்தினைக் குழி பறிப்பதற்கானநகர்வுகள்தென்படுகின்றன.
மீண்டும் மீண்டும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கத்தவறிய இலங்கை நாட்டின் தவறினை அரசாங்கம் உடனடியாக அணுக நடவடிக்கை எடுக்கவேண்டும். முஸ்லிம் சமூகத்தினிடையே மார்க்கத்தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் உள்ளடங்கலாக பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும், நாட்டினது மூலப்பொறுப்பான அதன் அனைத்து பிரஜைகளையும் சமமாக பாதுகாத் தல் மேலோங்க வேண்டும். அரசாங்கம் உறுதியாக நடந்துகொள்வது முக்கியமாக இருப்பதுடன் உடனடியாக பெண்களை ஆண்களிலிருந்து வேற்றுமைப்படுத்துகின்ற சட்டங்களை சீர்திருத்த வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவதனால் இந்நாட்டு மக்களுக்கு இவ்வரசாங்கம் மற்றும் பாராளு மன்றத்தினால் அதிக சமத்துவம் மற்றும் நீதியினை உறுதிப்படுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM