(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச சமூகத்தின் நல்லுறவு அவசியம். அதற்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. யுத்த காலத்திலும் எவருக்கும் அடிபணியவில்லை. இந்த உறுதிப்பாடே இனியும் தொடரும். இன்று முதல் நாட்டு மக்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்று ஆட்சி மாற்றத்தில் தேசிய பாதுகாப்பு முதலில் பலப்படுத்தப்படும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. ஆனால் எமது துரதிஸ்டம் அவற்றை முன்னெடுத்து செல்ல முடியாமல் போய்விட்டது. வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் அடிப்படை பிரச்சினைகள் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நிச்சயம் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கன்னி தேசிய சம்மேளம் சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
என்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் சரிவர நிறைவேற்றிய நான், எதிர்காலத்திலும் மக்களின் தேவைகளையும் நிறைவேற்றுவேன். 20 வருட இராணுவ வாழ்க்கையும், 10 வருட அரச வாழ்க்கையிலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நான் நிறைவேற்றினேன்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் காலத்தில் சர்வதேசத்தின் மத்தியில் பல அழுத்தங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டாம் என பிரயோகிக்கப்பட்டது. எந்நிலையிலும் நாட்டின் இறையாண்மையினை விட்டுக் கொடுக்கவில்லை. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது. குறுகிய தேவைக்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவும் இயலாது.
வடக்கு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. ஆனால் எமது துரதிஸ்டம் அவற்றை முன்னெடுத்து செல்ல முடியாமல் போய்விட்டது. வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் அடிப்படை பிரச்சினைகள் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நிச்சயம் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்.
வழங்கப்பட்ட பொறுப்புக்களை எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லையை மீறியாவது அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். எல்லையை மீறி செயற்படுகின்றமையினாலேயே 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தை மூன்றரை வருடங்களில் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஒத்துழைப்பு வழங்க முடிந்தது. தாய் நாட்டிற்குள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு தலையிட இடமளிக்க முடியாது.
எமது நாட்டில் பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும், இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். இனவாத தீவிரவாதமொன்றை மீண்டும் உருவாக்க இடமளிக்கமாட்டேன். பாதுகாப்பான நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன். வடக்கு மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். அரச ஊழியர்கள் சுதந்திரமாக கடமையாற்றிக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். பெண்கள் அச்சமின்றி எந்தவொரு நேரத்திலும் செல்லக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். அதனை நாம் செய்வோம். பாதிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர், விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன்.
அனைத்து உலக நாடுகளுடனும் நாம் தொடர்புடைய பேணுவேன். எனினும், நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். உலக நாடுகளிடம் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத வகையில் செயற்படுவேன். எமது தவறுகளை சரி செய்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எம்முடன் கைக்கோர்க்குமாறு அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத ஒரு தேர்தல் பிரசாரத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதனூடாக தேர்தல் கலாசாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM