கோத்­தாவுக்கு சவா­லான வேட்­பாளர் எம்­மி­டமேயுள்ளார் : ஐ.தே.க. ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் - விஜித ஹேரத்

Published By: J.G.Stephan

12 Aug, 2019 | 10:26 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவுக்கு சவா­லான வேட்­பாளர் ஐக்­கிய தேசிய கட்­சி­யிடம் இல்லை. நாங்கள் பெய­ரிடும் வேட்­பா­ளரே சவா­லாக இருக்­கப்­போ­கின்றார்.

அதனால் ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்கள் எமக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வ­ர­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­வித்தார்.

அத்­ட­துடன் கோத்­த­பாய வேட்­பா­ள­ரானால் தமிழ்  முஸ்லிம் மக்கள் மீண்டும் அச்­சத்­துக்­குள்­ளாகும் நிலை ஏற்­படும். அதனால் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நாங்கள் பெய­ரிடும் வேட்­பா­ளரை ஆத­ரிக்க முன்­வ­ர­வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி அறி­விக்­க­வுள்ள  ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில்  கோத்­த­பாய ராஜபக்ஷ் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்றால் மீண்டும் நாட்­டுக்குள் வெள்­ளைவேன் கலா­சாரம் ஆரம்­பிக்கும். அதபோல் ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யாத நிலை ஏற்­படும். அவ்­வாறு அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டால் ஜேர்­மனின் ஹிட்லர் போன்றே செயற்­ப­டுவார்.  கடந்­த­கால சம்­ப­வங்­களை இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக தெரி­விக்­கலாம்.

அதனால் கோத்­த­பா­யவை தோட்­க­டிக்க ஒரே மாற்­று­வேட்­பா­ளரை மக்கள் விடு­தலை எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­விக்க இருக்­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்­சி­யிடம் வெற்­றி­பெ­றக்­கூ­டிய வேட்­பாளர் இல்லை. அத­னால்தான் கட்­சிக்குள் வேட்­பாளர் தெரிவில் குழப்பம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் அனு­பவம் உள்ள ஒரு­வ­ரையே நாங்கள் பெய­ரி­டுவோம். அர­சியல் அனு­பவம் இருப்­ப­வ­ருக்கே பொது­மக்­களின் நிலை­மை­களை உணர்ந்து நாட்டை கொண்­டு­செல்ல முடியும்.ராணு­வத்தில் அனு­பவம் இருப்­ப­வ­ருக்கு ராணு­வத்தை நிர்­வ­கிக்­கவே முடியும். 

மேலும் கோத்­த­பாய ராஜபக்ஷ் இன­வா­தத்தை தூண்டி நாட்­டுக்குள் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவர். தமிழ். முஸ்லிம் மக்கள் அதனை நன்­க­றி­வார்கள். கோத்­த­பாய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த காலத்தில்  தமிழ் முஸ்லிம் மக்கள் பாரிய அச்­சத்­திலே வாழ்ந்து வந்­தார்கள். அதனால் மீ்ண்டுமொ­ரு­முறை அவ்­வா­றான கலா­சாரம் ஏற்­ப­டு­வதை விரும்­ப­மாட்­டார்கள். 

அதனால்  தமிழ் முஸ்லிம் மக்கள் எமது வேட்­பா­ளரை வெற்­றி­பெ­றச்­செய்ய முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக போட்­டி­யி­டக்­கூ­டிய வேட்­பாளர் இல்லை.

அதனால்தான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. எனவே கோத்தபாய ராஜபக்ஷ்க்கு சவாலான வேட்பாளர் மக்கள் விடுதலை முன்னணியிடமே இருக்கின்றது. அவரை வெற்றிபெறச்செய்ய  ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் இம்முறை எமக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17