ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச இன்று பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இழுபறிநிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சஜித் பிரேமதாசவை போட்டியில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் அணியினரின் சார்பில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ இன்று பதுளையில் பாரிய பேரணியை பொதுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான இந்த பேரணி, சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்த பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறக் கூடாது என்றும் கட்சி இன்னமும் ஒரு தீர்மானம் எடுக்காத நிலையில் இவ்வாறு செயற்படக் கூடாது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதுளைக்கு அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடவையாக வருகை தருவதானல் அவரை வரவேற்கும் வகையில் இந்த பேரணியையும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM