சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது

Published By: Digital Desk 4

10 Aug, 2019 | 07:00 PM
image

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்ட விரோதமாக  இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இரணைமடு குளத்தில் இன்று பகல் 7 பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். 

அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38