இன்றைய திகதியில் நாளாந்தம் நாம் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது எமக்கு தலைவலி ஏற்படுவது இயல்பு. சிலருக்கு காரணமேயில்லாமல் தலைவலி ஏற்படும். மூளையிலுள்ள நரம்புகளில் ஏதேனும் சிறிய அளவில் இடையூறோ அல்லது தடையோ ஏற்பட்டால் கூட தலைவலி உண்டாகும்.
இதைத் தொடர்ந்து தலைவலி தானே... தானாக சரியாகிவிடும் என்றெண்ணி அதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் , பக்கவாதம், வலிப்பு, தலை சுற்றல், கழுத்து வலி, முதுகுவலி, கைகால் எரிச்சல், கை கால் வலி, கை கால் நடுக்கம் ,நினைவு திறன் இழப்பு ,ஞாபகமறதி உறக்கமின்மை என பல பாதிப்புகள் ஏற்படும். நரம்புகளில் உருவாகும் கோளாறுகளால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
தலைவலி பல தருணங்களில், பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருப்பினும், நாற்பது வயதை கடந்த பிறகு வரும் முதல் தலைவலி முக்கியமானது. ஏனெனில் இத்தகைய தருணங்களில் உண்டாகும் தலைவலி, சில நொடிகளிலேயே அதிக அளவிற்கு பரவி, வலியையும், வேதனையையும் அளித்து, முழு கவனத்தையும் ஈர்க்கும். இந்த தலைவலி மிகவும் ஆபத்தானது.
சிலருக்கு இதன்போது தலைசுற்றலும் ஏற்படும். இவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும். இதன் காரணமாகவே தலைவலி திடீரென்று தோன்றி விரைவாக பரவுகிறது. இதனை மருத்துவமனையில்Thunderclap Headache என குறிப்பிடுவார்கள்.
சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதன் காரணமாக தலைவலி உண்டானால், மூளையில் இரத்தக் குழாய்களுக்குள் அல்லது மூளையின் ஏதேனும் ஒரு பகுதிக்குள் கிருமித்தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாகவும் தலைவலி அதிகரிக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் க்ளக்கோமா பாதிப்பு இருந்தால், அவர்களுக்கும் திடீரென்று தலைவலி ஏற்படும்.
இவர்கள் கண் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றாலும், நரம்பியல் மருத்துவர்களையும் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அப்போது தான் தலைவலி குறித்த துல்லியமான தகவல்களைப் பெற்று அதற்குரிய சிகிச்சையும், நிவாரணத்தையும் அளிக்க இயலும். அத்துடன் இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்த்து, மூளையில் உள்ள நரம்பியல் தொடர்பான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள பரிந்துரைத்தால் அதனை தவிர்க்காமல், செய்து மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் தலைவலி அதற்கு மேல் தொடர்ந்து வராமல் இருப்பதற்கான தடுப்பு சிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.
டொக்டர் பிரபாஸ்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM