அண்மையில் கொழும் பில் இடம்பெற்ற JASTECA 2015 விருது வைபவத்தில் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பேண்தகு நிலைபாடுகளுக்கான வெண்கல விருது சம்பத் வங்கிக்கு வழங்கப்பட்டது.
தேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தரங்களை மேலுயர்த்தும் பிரயத்தனங்களுக்கென முன்னெடுக்கப்பட்டும் ’சம்பத் சவிய’ திட்டத்தினை முன்னிறுத்தி மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.தொழில் முயற்சியாண்மை விருத்தி என்னும் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் வகையிலான பயிற்சிப் பட்டறைகள் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் வங்கியினால் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன.
சம்பத் சவிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிறிய நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பெரு வெற்றிபெற்ற நிலையை அடைந்துள்ளன.
மிகப்பெரும் வங்கிகளில் ஒன்றான சம்பத் வங்கி ஒவ்வொரு ஈடுபாட்டாளர்களுக்கும் உண்மை யான பெறுமதிகளை முழு மனதுடன் வழங்கி வருகின்றது என்று வங்கியின் சாதனைகள் பற்றி எடுத்துரைத்த பிரதி பொது முகாமையாளர் தாரக ரண்வல தெரிவிக்கிறார். "இந்த மதிப்பு மிக்க விருதினை பெற்றுக் கொண்டதன் மூலம் நாம் பெருமளவு மதிப்பு நிலையை அடைந்துள்ளோம். எமது செயற்பாடுகள் சமூகத்தின் தேவைகளையும் நாட்டின் சிறந்த நிலையையும் எடுத்தியம்புகின்றன.மேற்படி விருதுகள் வைப
வம் ஜப்பான், ஸ்ரீலங்கா தொழில்நுட்ப கலாசார சங்கத்தினால் ஒருங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பானது நிறுவனங்கள் பல்வேறுவகை முன்னெடுப்புகள் பலவற்றின் வழியே மக்களுடனான உறவுகள், செயற்பாடுகளை மிளிரச் செய்துவருகின்றது. JASTECA நிறுவனமானது வர்த்தக நிறுவனங்கள் ஈடுபாட்டாளர்களினதும் சட்டக்கடப்பாடுகளினதும் எல்லைகளை தாண்டிச் சென்று வாடிக்கையாளரின் அபிலாசைகளை நிறைவேற்றும் கடப்பாடுகளை முன்னிறுத்தி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM