(எம்.மனோசித்ரா)
நாட்டில் வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை 1960 ஆம் ஆண்டு முதல் 90 வரை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது. இதன்படி முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழி கற்பித்தல் சேவையை அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்கள் குழாம் வழங்கவுள்ளது. அத்துடன் ஒரு ஆசிரியரின் தன்னார்வ சேவைக்காலம் 2 வருடங்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM