(செ.தேன்மொழி)
கம்பஹா மாவட்ட பூகொட - மண்டாவில பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் பிரிதொருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியமையினாலே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
இந்த கொலை சம்வபம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. குறித்த நபரை சந்தேகநபர் பொல்லால் தாக்கி காயப்படுத்திய பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
இதன்போது படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மண்டாவில பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ராஜபக்ஷகே லலித் ராஜபக்ஷ என்பவராவார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM