(எம்.எம்.சில்வெஸ்டர்)
கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் கவனத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அந்த அறிக்கை தொடர்பாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து பார்த்து, பதில் அளிப்பதற்கு 7 நாள் கால அவகாசத்தை கணக்காய்வு திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
“ ஸ்ரீ லங்கா நிதி தொடர்பாக ஆராய்ந்து கணக்காய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 28 ஆம் திகதியன்று கோரியிருந்தேன். இதன்படி 6 விடயங்களை மையப்படுத்தி கணக்காய்வாளர் திணைக்களத்தினால் சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கை ஒன்று எனக்கு வழங்கப்பட்டது.
இந்த மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறவனத்துக்கு அனுப்பியுள்ளதுடன், அது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கு கணக்காய்வு திணைக்களத்தினால் 7 நாள் கால அவகாசம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கை 6 விடங்களை மையப்படுத்தி ஆராயப்பட்டுள்ளதுடன், இந்த அறிக்கை குறித்த இறுதி கணக்காய்வு அறிக்கை 14 நாட்களில் கணக்காய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் திணைக்களம் அறிவித்துள்ளது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM