மெக்சிக்கோ நகரில் பாலங்களில் தொங்கவிடப்பட்ட நிலையில் உடல்கள்

Published By: Rajeeban

09 Aug, 2019 | 10:57 AM
image

மெக்சிக்கோவின் உருபான் நகரின் மூன்று இடங்களில் 19உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் சில உடல்கள் பாலத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருந்தன என தெரிவித்துள்ளனர்.

நகரில் உள்ள பாலத்தில் பல உடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மேலும் துண்டிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் கைவிடப்பட்ட உடல்களை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

உடல்களிற்கு அருகில் எச்சரிக்கை செய்திகளையும் காணமுடிகின்றது.

ஜலிஸ்கோ புதிய தலைமுறை என்ற அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.

இரண்டு போதைப்பொருள் கடத்தல்கும்பல்களிற்கு இடையிலான மோதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடல்களே இவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல குற்றவாளிக் கும்பல்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன போதைப்பொருளை உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான மோதல் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52