(எம்.நேசமணி)
15 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்கு அறவிடப்பட்ட வற்வரி தற்போது திருத்தம் செய்யப்பட்டு ரூபா 25 மில்லியனுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்களுக்கு மாத்திரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகர தொடர்மாடி அபிவிருத்தியாளர் சங்கத்தின் தலைவர் கே.சீலன் தெரிவித்தார்.
அமைச்சர் மனோகணேசன் ஊடாக நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த வரி திருத்தத்தை அரசாங்கம் மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்கு 15 வீத வற்வரியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை அந்த வரியை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது.
இந்த 15 வீத வற் வரியினால் நாம் எதிர்நோக்கிய சவால்களையும் அதேபோன்று சாதாரண வாடிக்கையாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளையும் நிதியமைச்சரின் கவனத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் மூலம் கொண்டு சென்றோம்.
அது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டோம். அதன் பின்னரே இந்த வற்வரியில் திருத்தத்தை மேற்கொள்ள நிதி அமைச்சு இணக்கம் தெரிவித்தது.
அதனடிப்படையில் கடந்த ஜூலை 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ரூபா 25 மில்லியனுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்களுக்கு மாத்திரமே 15வீத வற்வரி அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டது.
அதாவது ஒரு தொடர் மாடி குடியிருப்பு தொகுதியிலுள்ள சகல வீடுகளும் ரூபா 25 மில்லியனுக்கு குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே 15வீத வற்வரி அறவிடப்படமாட்டாது. மாறாக அந்த குடியிருப்பு தொகுதியில் ஒரு வீடாயினும் ரூபா 25 மில்லியனுக்கு அதிகம் என்றால் அந்த குடியிருப்பு தொகுதியிலுள்ள சகல வீடுகளுக்கும் 15வீத வற்வரி செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM