கென்ய பாராளுமன்றத்திற்கு தனது குழந்தையை தூக்கி வந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுலேகா ஹஸன் மேற்படி பெண் பாராளுமன்ற உறுப்பினரை வெளியேற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கிருந்த ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றக் கட்டிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுலேகா பாராளுமன்றத்தை விட்டு வெ ளியேறி குழந்தையை எவரிடமாவது ஒப்படைத்து விட்டு திரும்ப பாராளுமன்றிற்குள் வரலாம் என சபாநாயகரான கிறிஸ்தோப்பர் ஒமுலேலே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு பாராளுமன்ற சட்டவிதிகளின் பிரகாரம் குழந்தைகள் உட்பட அறிமுகமற்றவர்களுக்கு பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை. இந்நிலையில். சுலேகாவின் செயற்பாடு வெட்கக்கேடான ஒன்றென சில ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாராளுமன்றத்தில் மேலும் குடும்ப நட்புறவு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சுலேகா, அத்தகைய நிலைமை ஏற்பட மேலும் பல பெண்கள் பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
"எனக்கு பாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வருவது உண்மையிலேயே கடினமான ஒரு விடயம். ஆனால் எனக்கு ஏற்பட்ட அவசர நிலைமையொன்றால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் குழந்தைகள் காப்பகமொன்று ஏற்படுத்தப்பட்டால் அதில் தனது குழந்தையை விட்டு விட்டு வரக் கூடியதாக இருந்திருக்கும்" என்று கூறினார். இது தொடர்பில் பிரதி சபாநாயகர் மோஸஸ் சிபோய் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வசதியொன்று உள்ளதாகவும் ஆனால் அங்கு குழந்தைகளை பராமரிப்பதற்கு விரும்பும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவியாளர் ஒருவரை அழைத்து வரவேண்டியுள்ளதாகவும் கூறினார். உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சுலேகாவின் ஆதரவாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டோர்ன் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தனது 3 மாதக் குழந்தையுடன் கலந்துகொண்டு வரலாறு படைத்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM