எம்முடைய உடலில் நோயைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா தொற்று பரவுதலை கண்டறியும் எளிய கையடக்க கருவியை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அசாமில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான கே பரமேஸ்வர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....
உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படவும், மரணங்கள் ஏற்படவும் பாக்டீரியா கிருமிகளின் தீவிரத்தொற்று மூலகாரணமாக அமைகிறது. நோயைக் கண்டறிவதில் ஏற்படும் காலதாமதம், இதன் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது தற்போதுள்ள நடைமுறையில் நோயாளியின் உடலிலிருந்து பாக்டீரியா மாதிரிகளை சேகரித்து, அதனை பரிசோதனைக்கூடத்தில் வளர வைத்து, அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தால் மட்டுமே, அதனால் ஏற்படும் நோயின் தன்மையைக் கண்டறிய முடிகிறது. இந்த நடைமுறையானது செலவு மிகுந்ததும், காலதாமதமும், நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலையும் நிலவுகிறது. எனவே பாக்டீரியா தொற்றை எளிய முறையில் கண்டறிவதற்கான கையடக்க கருவியை உருவாக்குவதில் நாங்கள் ஈடுபட்டோம்.
பாக்டீரியாக்களின் செல் சுவர்களில் மின்சுமை காணப்படும். உடலுக்கு நன்மையை விளைவிக்கும் பாக்டீரியாக்களிலும், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலும் மின்சுமையின் அளவு வேறுபட்டு காணப்படும். இந்த மின் சுமையை அளவிடும் சென்சார் அடங்கிய இலத்திரனியல் கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாக்டீரியாக்களின் செல் சுவரிலுள்ள மின் சுமைக்கு ஏற்ப இந்த கருவியில் மின்னோட்டம் தூண்டப்படும். தூண்டப்படும் மின்னோட்டத்தை இந்த கருவி பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் உடலில் பாக்டீரியா பரவுவதை விரைவில் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும், அத்துடன் நோயாளிகளையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். இதன் விலையும் குறைவாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறியவும், கருவுறுதலை கண்டறியவும் கண்டறியவும் கையடக்க கருவிகள் இருப்பது போல, எதிர்காலத்தில் பாக்டீரியாக்களின் தொற்றுதலை கையடக்க கருவியின் மூலம் இனி கண்டறியலாம்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM