(எம்.மனோசித்ரா)
ஒவ்வொரு கட்சிக்கும் தத்தமது வேட்பாளர் குறித்து அறிவிக்கும் உரிமை இருக்கிறது. அதற்கிணங்கவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பொதுஜன பெரமுன கோதாபய ராஜபக்ஷவையும் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றன.
எனினும் சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது :
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டாலும் ஜனாதிபதி யார் என்று தீர்மானிக்கும் பொறுப்பு சுதந்திர கட்சியிடமே இருக்கிறது.
காரணம் சுதந்திர கட்சியின் முடிவு என்ன என்பதையே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தீர்க்கமான முடிவினை வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM