(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
ஹிஸ்புல்லாஹ் தொழிற்பயிற்சி நிறுவனம் என்பது வேறு , மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனம் என்பது வேறாகும். எமது ஆட்சியில் ஹிஸ்புல்லாஹ் தொழிற்பயிற்சி நிறுவனமாக இயங்கி பல நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
எனினும் 2016 ஆம் ஆண்டில் இருந்தே இது பல்கலைக்கழகமாக மாறியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனம் குறித்து ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
காத்தான்குடியில் ஒரு தொழிற்பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டும். அத்துடன் இந்த ஹிரா நிறுவனம் ஒரு சமூக சேவை நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த விதிமுறைகளுக்கு அமையவே எமது ஆட்சியில் எனது அமைச்சு செயற்பட்டது. அப்போது எமக்கு முன்வைத்த காரணிகளை உள்ளடக்கி நாம் செலுத்திய அவதானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுத்தோம். பிரதான மூன்று கற்கை நெறிகளை உள்ளடக்கி பல்கலைக்கழகமாக மாற்றும் கோரிக்கையை முன்வைத்தனர். இது 2016 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதல் வங்கிக்கணக்கும் 2016 ஆம் ஆண்டில் தான் கிடைத்துள்ளது. ஆகவே 2015 ஆம் ஆண்டு 7ஆம் மாதத்துக்கு பின்னர் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் எமது காலத்துடன் இதனை தொடர்புபடுத்த அதுவும் எனது அமைச்சு முன்னெடுத்த தொழிற்பயிற்சிகள் திட்டங்களுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர்.
நீங்கள் என்னதான் குறை கூறினாலும் ஹிஸ்புல் லாஹ்வுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு அவர் இதனை நிறுவனமாக கொண்டு சென்றார். தொழிற்பயிற்சி நிறுவனம் என்ற வகையிலே நான் கருத்துக்களை முன்வைக்கின்றேன். இதில் அப்பாவி மக்களுக்கு பல நல்ல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நான் பல்கலைக்கழகம் பற்றி பேசவில்லை. அது குறித்து எனக்கு எந்த தெளிவும் இல்லை. ஆனால் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனம் என்பது வேறு, ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறு வனம் என்பது வேறாகும். இந்த இரண் டையும் ஒன்றாக்கி அரசியல் செய்ய வேண் டாம் என்றே கேட்டுக்கொள்கிறேன் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM