லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஒரு வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்திடீர் தீ காரணமாக வீட்டின் மூன்று அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், தளபாடங்கள் உடைகள் உட்பட அத்தியவசிய ஆவணங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் முற்றாக நாசமாகியுள்ளன.
இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும், மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த வீட்டில் தீ ஏற்படும் போது இருவர் இருந்துள்ளனர். எனினும் இவர்களின் உயிர் தெய்வதினமாக காப்பற்றப்பட்டுள்ளது.
இத் தீ காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM