விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணை சோதனை செய்ததில், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்.
எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை எக்ஸ் - ரே (X-ray) எடுத்த போது, அவரது தொடையில் தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.
அவரை எக்ஸ் - ரே (X-ray) கருவிக்குட்படுத்தியபோது, அவரது தொடைப்பகுதியில், தோலுக்கும் சதைக்கும் இடையில் ஒரு பையொன்று இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு அ றுவை சி கிச்சை செய்து அந்த பையை அகற்றியபோது, அது திரவ கொ க்கைன் என்னும் போதைப்பொருள் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இது வரை இப்படியொரு போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றிருக்கவில்லையெனவும் அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் கடத்திய அந்த அந்த பெண்ணுக்கு அ றுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், குறித்த அந்த பையை அகற்றாமல் இருந்தால்,அப்பை இரத்தக் குழாய்களை அழுத்தி, அவரது உயிருக்கே ஆ பத்தாகியிருக்கலாம் என்றார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 36,733 டொலர்கள் எனவும், இதுபோல் போதைப்பொருளை கடத்த உதவுவோருக்கு ஒவ்வொரு முறையும் 1400- 3,000 டொலர்கள் வரை கிடைக்குமெனவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு, குறித்தப் பெண், பொலிஸாரின் பாதுகாப்பிலேயே வைத்தியசாலையில் இன்னமும் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM