குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிடியாணை 

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 08:05 PM
image

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிசார் விடுதியில் பொருத்தப்;பட்ட சீ.;சீ.ரீவி கமரா பதிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து சந்தேக நபர்; ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் இன்று(07) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் (07) மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரைக் கைது செய்யவேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தாலும் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் இன்றைய தினம் குற்றத்தடுப்;பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்;கப்பட்;டது.

இதனைக்கவனத்திலெடுத்து மன்று மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 21ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44