யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு சுஷ்மா சுவராஜின் வகிபாகம் இன்று வரை உணரப்படுகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியா அரசாங்கத்தின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜின் மறைவு கவலையளிப்பதுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலமாக திகழ்ந்த இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாட்டு முயற்சிக்கு ஏற்பாட்டாளராக செயற்படுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மிகவும் புத்துசாதுரியமாகவும் ராஜதந்திரத்துடனும் விடயங்களை கையாள்வதில் சிறந்து விளங்கியவர்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அவரது வகிபாகம் இன்றுவரை உணரப்படுகிறது. வழக்கறிஞரான இவர் மாநில அரசிலிருந்து மத்திய அரசுவரை முன்னேறி ஒளிபரப்பு, குடும்பநலம், வெளியுறவு ஆகிய பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்துள்ளார் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM