கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர் வரும் செப்ரம்பர் 03ம் திகதி வரையும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் அகழ்வது தொடர்பாக பிரதேச மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலும் மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில் கடந்த மாத முற்பகுதியில் பூநகரி காவல் நிலையம்முன்பாக பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததையடுத்து, இரு தரப்புக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பூநகரிப் பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மணல் அகழ்விற்கு நேற்று (06-08-2019) வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது,
குறித்த வழக்கு நேற்று (06) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம்; பிருந்தா, கோகுலதீபன் தர்சா, ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்தமன்று பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடையினை எதிர் வரும் செப்ரம்பர் 03ம் திகதி வரையும் மேலும் நீடித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM