மது போதையில் வீதியில் நின்று கொண்டு ஒழுக்கயீனமாக நடந்து கொண்டதோடு வீதியில் சென்றவர்களை தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட ஒருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையுடன் வீதியில் விநின்று கொண்டு ஒழுக்கயீனமக நடந்து கொண்டதோடு வீதியால் செல்வோருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட ஒருவருக்கு 1500 ரூபா தண்டப்பணத்தை செலுத்தும்படி குறிப்பிட்ட நிலையில் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (7) உத்தரவிட்டார்.
கண்டி வீதி திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டபனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என்றும் தினமும் இவ்வாறு வீதியில் செல்வோருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு பொது மக்களால் மேற்கொள்ளபட்ட அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே குறித்த நபர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM