காஸ்மீரில் அரசியல் தலைவர்கள் பிரிவினைவாத தலைவர்கள் உட்பட 400ற்கும் அதிகமானவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ள இந்தியாடுடே ஹோட்டல்கள் தனியார் மற்றும் அரச கட்டிடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்க உத்தரவின் கீழ்ஹோட்டல்களும் அரச விடுதிகளும் அரச அலுவலகங்களும் தனியார் கட்டிடங்களும் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான ஒமார் அப்துல்லாவும் மெஹ்பூபா முக்தியும் தனித்தனிஇடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடியவர்கள் என கருதப்படும் அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முவ்டி துணிச்சலுடன் தனது கைதினை எதிர்கொண்டார் ஆனால் அவரது மகள் தாயை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவி;த்துள்ள இந்தியா டுடே மற்றுமொரு முன்னாள் முதல்வாரன ஒமார் அப்துல்லா கண்ணீர் விட்டார் என தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தற்போதைக்கு விடுதலையாக மாட்டார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர் என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM