நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்மொழியப்பட்ட வரிச் சலுகைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
தேசத்தை கட்டியெழுப்பும் வரித் திருத்தச் சட்டம் மற்றும் பெறுமதி சேர் (VAT)வரித் திருத்தச் சட்டம் என்பனவற்றுக்கு அமைச்சரவையின் அனுமதி இந்த மாதம் கிடைத்துள்ளது.
இதன்படி, சுற்றுலா கைத்தொழிலை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள், சுற்றுலாவிடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் போன்றவற்றுக்கு உள்நாட்டு வங்கியொன்றின் ஊடாக வெளிநாட்டிலிருந்து நிதி கிடைத்தால் அந்த தொகைக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு செய்யப்படாது.
மேலும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீட செய்யப்படாது.
கட்டுமான பணிகளில் ஈடுபடும் போது உப ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வரிச் சலுகை பிரதான ஒப்பந்தக்காரர்களுக்கும் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக பட்டை தீட்டப்படாத இரத்தினக்கல் இறக்குமதியின் போதும் வரிச் சலுகை வழங்கப்படும். சுத்திகரிக்கப்படாத பாம் எண்;ணெய் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்திகளை செய்யும் போது வரி விலக்கு அளிக்கப்படும்.
பெறுமதி சேர் வரி அறவீடு தொடர்பில் திருத்தங்கள் செய்யப்படும் குறிப்பிட்ட மாதத்திற்கான பெறுமதி சேர் தொகைக்கான வரிச் செலுத்துகை இறுதித் திகதியாக எதிர்வரும் மாதம் 15, 20ம் திகதிகள் காணப்படுகின்றன.
இதனால் வரிச் செலுத்துவோர் வரிச் செலுத்துகை மற்றும் வரி நிர்வாகம் என்பனவற்றை மேற்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. வரிச் செலுத்துவோரின் கோரிக்கைக்க்கு அமைய இந்த அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் மாதந்த வரிச் செலுத்தும் திகதி எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதியாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டுரிமை வீடுகள் (Condominium) வழங்கும் போது விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர் வரியில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 25 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த பெறுமதியுடைய வீட்டுத் திட்டங்களுக்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.
பெறுமதி சேர் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக நெத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் விற்பனை ஒப்பந்தம் மூலம் எழுதப்பட்டுள்ள அல்லது உள்ளுராட்சி மன்றமொன்றில் இணக்கச் சான்றிதழ் பெற்றுக் கொண்டுள்ள கூட்டுரிமை வீடுகளுக்கும் இந்த பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.
இதற்கு மேலதிகமாக உள்நாட்டில் விளைவிக்கப்படும் சிவப்பு பச்சை அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் தவிட்டு எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
மேலும், 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையின் பிரகாரம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு முதலீட்டுச் சபை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு அலகு ஒன்றுக்கு அறவீடு செய்யப்படும் 75 ரூபா பெறுமதி சேர் வரி 100 ரூபாவாக உயர்த்தப்படும்.
இந்த புதிய திருத்தச் சட்டங்கள் அனைத்தும் சட்ட வரைபுக்கு உள்ளாக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனுமதிக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM