(நா.தினுஷா)
பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய மூன்று விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்று கட்டமாக இடம்பெறவுள்ள இந்த விமான நிலையங்களின் அபிவிருத்திப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மத்தள விமான நிலையத்தின் சேவைகளைப் துரிதப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுத்து வருவதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சிந்திப்பில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
போக்குவரத்துத் துறையை துரிதப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேலைத்திட்டங்களோடு இன்னும் புதிய வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரத்துக்கான புகையிரத சேவைகளை துரிதப்படுத்துவதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன.இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியை வழஙக்வுள்ளது. அதேபோன்று கண்டி நகரத்துக்கான புகையிரத சேவைகளும் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்படுமென அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM