தமிழகத்தின் நாமக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே கொண்டாடிய கோயில் திருவிழாவில், 150க்கும் அதிகமான ஆடுகள் வெட்டி, மூவாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது.
இந்தியாவின் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகத்தை அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில், பொங்களாயி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கிடா வெட்டி பூஜை நடக்கும்; இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டின் விழா கடந்த வாரம் துவங்கியது. கடந்த 4ம் திகதி இரவு 12 மணிக்கு, பொங்களாயி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் மற்றும் இண்டங்காட்டு கருப்பசாமிக்கு 150க்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கல் வைத்து, பூஜை நடந்தது.
இதையடுத்து, பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து, காலை 5 மணி முதல் சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது. இதில், புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், ஆத்துார், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM