பூட்டப்பட்டிருந்த வீட்டில் தீ பற்றியதில் வீடும் உடமைகளும் முற்றாக சேதம்

Published By: Digital Desk 4

06 Aug, 2019 | 12:44 PM
image

ஏறாவூர், மிச்நகர் கிராமத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை (05) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வீடும் வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்துள்ளன.

வீட்டிலிருந்தோர் வெளியே சென்று சுமார் 15 நிமிடங்கள் கழிந்த நிலையில் வீடு தீப்பற்றிக் கொண்டுள்ளது.

வீடு தீப்பற்றிப் எரிவதை அவதானித்த அயலவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்து   அயல் வீடுகளுக்கும் தீ பரவாமல் பாதுகாத்துள்ளனர்.

உதவிக்கு விரைந்தோரால் தீ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபொழுது தீ பற்றிக் கொண்ட வீட்டின் பெரும்பாலான பகுதிகளும் உடமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51