(எம்.எம்.சில்வெஸ்டர்)
சீனாவில் அண்மையில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய மாதவன் ராஜகுமாருக்கு பணப்பரிசு வழங்குவற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பு - 07 இல் விளையாட்டுத்துறை அமைச்சின் 'மினி' கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ‘வீரகேசரி இணையத்தளம்’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதிலளிக்கையில்,
“அவருக்கு (மாதவன் ராஜகுமார்) எமது அமைச்சு பணப்பரிசில் வழங்கும். எனினும், அவர் பங்கேற்ற போட்டியின் வகை மற்றும் தரம் குறித்து ஆராய்ந்து பார்த்து அவருக்கான பணப்பரிசு வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அவரின் ஆற்றல் மற்றும் திறமையை நான் மதிக்கிறேன். அதற்கான சன்மானம் வழங்கப்படும்” என்றார்.
இதற்கிடையே குறுக்கிட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக்க முத்துகல,
“எமது திணைக்களத்துக்கு வரும் வீர, வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் இந்த குவளையை நினைவுச்சின்னமாக வழங்குவது வழக்கம். அதுபோன்றுதான் அவருக்கும் அந்த குவளையை நான் வழங்கினேன். அது நினைவுச் சின்னமாக வழங்கப்பட்டதே, தவிர அது பரிசல்ல” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM