யானைகளின் தாக்கம் அதிகரிப்பு - அதிகாரிகள் அசமந்தம் ;ஊருககுள் யானைகள் இறக்கி விடப்பட்டதா? என மக்கள் கேள்வி

Published By: Digital Desk 4

05 Aug, 2019 | 06:16 PM
image

வவுனியா நெடுங்­கேணி சேனைப்­பு­லவு கிரா­மத்­துக்­குள் குடி­கொண்­டி­ருக்­கும் யானைக் கூட்­டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவ­சா­யக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தாரத்­தைக் காக்க அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பல­த­ட­வை­கள் கேட்­டும் எந்­தப் பய­னும் கிட்­ட­வில்லை என நெடுங்­கேணி ஒலுமடு கிராம அபிவிருத்தி சங்க தலை­வர் பூபா­ல­சிங்­கம் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரிவித்­த­தா­வது,

நெடுங்­கே­ணிப் பகு­தி­யின் நாலா­பு­­றமும் யானை­க­ளின் தொல்லை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. எங்கு முறை­யிட்­டும் பயன் கிட்­ட­வில்லை. நெடுங்­கேணி வைத்தியசாலைககுள் உட்­பு­குந்த யானை மருத்­து­வ­ரை­யும் விரட்­டி­யது. அதற்கு உட­ன­டி­யாக வேலி அமைத்­துத் தரப்­ப­டும் என்று ஊட­கங்­க­ளில் அறிக்கை விட்­ட­னர். ஆனால், இரண்டு ஆண்­டு­கள் கடந்­தும் வேலி அமைக்­கப்­ப­ட­வில்லை. யானை­கள் மாமன், மச்­சான் வீட்­டுக்கு விருந்­துக்கு வரு­வது போன்று தின­மும் வரு­கின்­றன. பெரும்  அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இது­வரை நெடுங்­கே­ணி­யில் 9 வீடு­களை யானை­கள் உடைத்­துள்­ளன.

எந்­த­வொரு வீட்­டுக்­கும் ­இ­ழப்­பீடு கிடை­யாது. 400க்கும் மேற்­பட்ட தென்­னை­கள், ஆயி­ரம் வரை­யான வாழை­கள், 700க்கும் மேற்­பட்ட பப்­பாசி, நெல்­வ­யல்­கள் என கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்­களை நாசம் செய்­து­விட்­டது. இவற்­றுக்­கும் இழப்­பீடு கிடை­யாது.சேனைப்­பு­லவு கிரா­மத்­துக்­குள் உட்­பு­குந்த யானைக் கூட்­டம் தென்­னை­கள், கத்­தரி மட்­டு­மன்றி மாடு­க­ளின் தீவ­னத்­துக்­காக வளர்த்த புற்­க­ளை­யும் விட்­டு­வைக்­க­வில்லை.

அந்த யானைக்கு வெடி கொளுத்­தி­யும் செல்­ல­வில்லை. பெரும் வெளிச்­சம் பாச்­சப்­பட்­டது. அதற்­கும் எந்­தப் பதற்­ற­மும் இன்றி அசை­யாது யானை­கள் நிற்­கின்­றன. விவ­சா­யி­கள் அச்­ச­ம­டை­கின்­ற­னர். குறித்த வெளிச்­சத்­தில் ஓர் யானை­யில் குறி­சுட்ட அடை­யா­ளம் உள்ள­தாக விவ­சா­யி­கள் தெரிவிக்கின்ற­னர். இத­னால் நிச்­ச­ய­மாக வளர்ப்பு யானை­கள் என்­ப­தும் தெளி­வா­கின்­றது. எனவே குறித்த யானைக் கூட்­டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவ­சா­யக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக்காக்க அதி­கா­ரி­கள் இனி­யா­வது முன்­வ­ரு­வார்­களா எனக் கேள்வி எழுப்­பி­னார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04