வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்துக்குள் குடிகொண்டிருக்கும் யானைக் கூட்டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதடவைகள் கேட்டும் எந்தப் பயனும் கிட்டவில்லை என நெடுங்கேணி ஒலுமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூபாலசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நெடுங்கேணிப் பகுதியின் நாலாபுறமும் யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எங்கு முறையிட்டும் பயன் கிட்டவில்லை. நெடுங்கேணி வைத்தியசாலைககுள் உட்புகுந்த யானை மருத்துவரையும் விரட்டியது. அதற்கு உடனடியாக வேலி அமைத்துத் தரப்படும் என்று ஊடகங்களில் அறிக்கை விட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் வேலி அமைக்கப்படவில்லை. யானைகள் மாமன், மச்சான் வீட்டுக்கு விருந்துக்கு வருவது போன்று தினமும் வருகின்றன. பெரும் அழிவுகளை ஏற்படுத்துகின்றன. இதுவரை நெடுங்கேணியில் 9 வீடுகளை யானைகள் உடைத்துள்ளன.
எந்தவொரு வீட்டுக்கும் இழப்பீடு கிடையாது. 400க்கும் மேற்பட்ட தென்னைகள், ஆயிரம் வரையான வாழைகள், 700க்கும் மேற்பட்ட பப்பாசி, நெல்வயல்கள் என கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை நாசம் செய்துவிட்டது. இவற்றுக்கும் இழப்பீடு கிடையாது.சேனைப்புலவு கிராமத்துக்குள் உட்புகுந்த யானைக் கூட்டம் தென்னைகள், கத்தரி மட்டுமன்றி மாடுகளின் தீவனத்துக்காக வளர்த்த புற்களையும் விட்டுவைக்கவில்லை.
அந்த யானைக்கு வெடி கொளுத்தியும் செல்லவில்லை. பெரும் வெளிச்சம் பாச்சப்பட்டது. அதற்கும் எந்தப் பதற்றமும் இன்றி அசையாது யானைகள் நிற்கின்றன. விவசாயிகள் அச்சமடைகின்றனர். குறித்த வெளிச்சத்தில் ஓர் யானையில் குறிசுட்ட அடையாளம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நிச்சயமாக வளர்ப்பு யானைகள் என்பதும் தெளிவாகின்றது. எனவே குறித்த யானைக் கூட்டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக்காக்க அதிகாரிகள் இனியாவது முன்வருவார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM