(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் சந்தித்து கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதன் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிக்கவேண்டும். இதன் மூலமே சக்திமிக்க கூட்டணியை அமைக்கலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர்அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு தற்போது அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சியும் தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்திருக்கின்றது.
இருந்தபோதும் பொதுஜன பெரமுன கூட்டு எதிர்க்கட்சிகளுடன் இணைந்தே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க தீர்மானித்திருக்கின்றது.
இருந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி எமது கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ளவேண்டுமென அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM