சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோசர் முட்டை ஒன்றை 10 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ (Zhang Yangzhe) என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான்.
அண்மையில், அங்குள்ள நதிக்கரையோரம் யாங்ஷீ விளையாடிக்கொண்டிருந்தபோது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை அவதானித்துள்ளான்.
இது சாதாரண கற்களை காட்டிலும் வித்தியாசமாக இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், தனது தாய் மூலம் உள்ளூர் அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளான்.
அதனைத்தொடர்ந்து முட்டையை ஆய்வு செய்ததில், அது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை என்பது உறுதியாகியுள்ளது.
சிறுவன் கூறிய அதே இடத்தில், ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது, மேலும் 10 முட்டைகள் கிடைத்தன. இந்த முட்டைகளை கொண்டு, டைனோசர்கள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சீனாவின் 'டைனோசர்களின் வீடு' என்று பெருமையுடன் அறியப்படும் யேயுவானின் மக்கள் தொகை 3 மில்லியனுக்கும் அதிகமாகும். 1996 முதல், நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் 17,000 க்கும் மேற்பட்ட புதைபடிவ டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM