வடக்கு ஆளுநருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Published By: Digital Desk 4

05 Aug, 2019 | 11:55 AM
image

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குஎதிராக  வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதிலிருந்து எந்தவிதமுன்னறிவித்தலுமின்றி உடனடியாக பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டது 

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநராக கடந்த ஜனவரி மாதம் கலாநிதி சுரேன் ராகவன் பதவிஏற்றதற்கு பின்னர் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி  வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடினர் 

அதன் பின்னர் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி பொதுசேவை ஆணைக்குழு அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்  போது உறுப்பினர்களை உடனடியாக சந்திக்குமாறு  அழைத்த ஆளுநர் அவர்களை  இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளார். 

அதற்கு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்திருந்தநிலையில்  பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளரால், மேற்குறித்த உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு  ஆளுநர் கூறியதாக கடிதம் உறுப்பினர்களுக்கு  அனுப்பப்பட்டது  

இதற்கும் மேற்குறித்த உறுப்பினர்கள் இராஜினாமா செய்யாத காரணத்தினால் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழு கலைக்கப்பட்டதாக ஆளுனரால் அறிவிக்கப்பட்டது 

அரசியல் யாப்புக்கு அமைவாக ஆளுநரால் பொதுசேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் இருந்தபோதும் கலைக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை ஆனாலும் உறுப்பினர்கள் விரும்பும் பட்சத்தில்  தாங்களாக இராஜினாமா செய்ய முடியும் அல்லது ஆணைக்குழு உறுப்பினர்களை கலைப்பதற்கான தகுதியான காரணங்கள் முன்வைக்கப்பட்டு அதுஉறுதிப்படுத்தப்பட்ட  பின்னர் ஆளுநர் கலைக்கலாம். 

ஆனால்  தகுதியான காரணங்கள் இல்லாமல் பொதுசேவை ஆணைக்குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து உறுப்பினர்களால் கடந்த வெள்ளிக்கிழமை வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19